இந்தியாவின் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலை காரணமாக, கடந்த சில நாள்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரச புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் (18.06.2023) வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரவியலில், வட மாநிலங்களில் கோடையின் தாக்கம் இன்னும் தீவிரமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உத்தரப் பிரதேசத்தின் பல்லியா பகுதியில் ஜூன் 15-17 திகதிகளில் தீவிர வெப்பத்தால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமார் 400 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதைக் கடந்தவர்கள் என அப்பகுதியின் தலைமை மருத்துவ அதிகாரி ஜெயந்த் குமார் தெரிவித்துள்ளார்.
வெப்ப அலை தீவிரம்
பெரும்பாலானோர் மாரடைப்பு, மூளை நரம்பு அடைப்பு, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகளுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இந்த பகுதிகளில் வழக்கத்தை விட 4.7 டிகிரி வெப்பம் கூடுதலாக இருந்துள்ளது.