எப்போது திருமணம் எப்போது திருமணம் என நயன்தாராவிடமும், விக்கியிடமும் நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் கேட்ட நிலையில், கடந்த மாதம் 9ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்திற்கு பின் இருவரும் ஹனிமூன் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், இவர்களின் திருமணத்தன்று எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடுவதாகவும் அறிவித்து இருந்தது.
அன்றாடம் பல சர்ச்சையான செய்திகள் இவர்களை பற்றி வதந்திகளும் பரவி வரும் நிலையில், தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பின் ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரிலும் வெளியானது.
இந்த படத்தின் போதே சமந்தா மீது விக்கி அதிகம் அக்கறை எடுத்துக்கொண்டதாகவும், இதனால் நயன் அப்போதே செம்ம கடுப்பாகியதாகவும் கூறப்பட்டது.
தற்போது நயன்தாராவும், ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் லைகா தயாரிப்பில் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதலில் நயனை நடிக்க வைக்க தான் கூறப்பட்டதாம்.
ஆனால், அதன் பின் அஜித்துக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க உள்ளதாக விக்கியும் சிபாரிசு செய்திருக்கிறாராம்.இதை கேள்விப்பட்ட நயனும், விக்கி மீது கோபமடைந்து பிரச்சினை செய்துள்ளாராம். பழைய பிரச்சினையும் இதையும் சேர்த்து நயன் விக்கியை ஒரு வழி பண்ணிவிட்டார் என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின் சண்டை வருவது சாதாரணமான ஒன்று என்றாலும், என்ன செய்வது என தெரியாமல் விக்கி விழிபிதுங்கி நிற்கிறாராம்.