29 May, 2023

இலங்கையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று! இறுதி சடங்கு நேரத்தில் உயிருடன் வந்த பெண்

கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர்  இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில்  உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இறந்ததாகக் கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு, நீதவான் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் அவர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இறுதிச் சடங்கிற்குத் ஏற்பாடு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் காணாமல் போயுள்ளார்.

நேற்று காலை 6.30 மணியளவில் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.

அதற்கமைய, நேற்று காலை உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது, ​​வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் ஊன்றுகோல் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் காணப்பட்டன.

நீர்ச்செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளார். அப்போது அவரின் உடல் மிதப்பதனை அவதானித்துள்ளார்.

Share