23 September, 2023

கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த குடும்பத்துக்கு கடைசி நேரத்தில் கிடைத்த நல்ல செய்தி

கனடாவிலிருந்து தாய் ஒருவரும் அவரது மூன்று பிள்ளைகளும் நாடுகடத்தப்பட இருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு கனடா பெடரல் அரசிடமிருந்து ஒரு செய்தி வந்தது.

நாடுகடத்தப்பட இருந்த தாயும் பிள்ளைகளும்

2019ஆம் ஆண்டு, Roxham Road வழியாக கனடாவுக்குள் நுழைந்தனர், ஆர்லின் (Arlyn Huilar), டேவிட் (David Ajibade) தம்பதியரும், பிள்ளைகளும்.

ஆர்லின் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர், டேவிட் நைஜீரியாவைச் சேர்ந்தவர். நைஜீரியாவில் வாழலாம் என்றால், அவர்களுடைய பிள்ளைகளை ஒரு கும்பல் கடத்த முயன்றது, பிலிப்பைன்ஸுக்குச் சென்றால், பிள்ளைகள் இனவெறுப்பை எதிர்கொள்ள நேர்ந்தது. ஆகவே, தம்பதியர் பிள்ளைகளுடன் கனடாவுக்குள் நுழைந்துவிட்டார்கள்.

டேவிட் குடும்பம் அப்போதே கனடாவில் அகதி நிலை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

கடந்த மாதம் அவர்கள் நாடுகடத்தப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி டேவிடும் அவரது இளைய மகனும் நைஜீரியாவுக்கும், ஆர்லினும் மற்ற இரண்டு பிள்ளைகளும் பிலிப்பைன்ஸுக்கும் செல்லவேண்டும் என முடிவானது.

Share