இலங்கையின் டோக் இன குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப் போவதில்லையென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
றித்த நடவடிக்ககைளுக்கு எதிரான மனுத் தாக்கல்கள் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வழங்கிய அறிவிப்பு சட்டமா அதிபரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.