தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். கடைசியாக இவர் நடித்த கோமாளி திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. திருமணத்திற்கு பிறகு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளாமல் இருக்கிறார் அம்மணி. ஏற்கனவே ஆச்சாரியா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டு தற்பொழுது குழந்தை பிறந்த பின்பு அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.
மேலும் அவர் நடித்திருந்த சில காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்2 படத்தில் காஜல் அகர்வாலை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் விபத்து காரணமாக அந்த திரைப்படம் முடங்கிப் போனது.
இந்த விபத்தை நேரில் பார்த்த நடிகை காஜல் அகர்வால் மூன்று நாட்கள் உணவு உண்ணாமல் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன் என்று அவரே கூறினார். தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார். ஆனால், இந்தியன் 2 திரைப்படம் எப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கும் என்ற விவரம் தெரியவில்லை.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவை நடிப்பாரா..? அல்லது சினிமாவை விட்டு விலகி விடுவாரா..? என்று கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், காஜல் அகர்வால் கூறியதாவது தற்போது குழந்தை பிறந்த காரணத்தினால் தன்னுடைய குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
படங்களில் அவரால் தற்போது நடிக்க முடியாது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் பட வாய்ப்புகளைப் பொறுத்து காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பாரா..? மாட்டாரா.? என்பதை காலம்தான் முடிவு செய்யும் என்கிறார்கள் காஜல் அகர்வாலுக்கும் நெருங்கிய வட்டாரங்கள்.
இந்நிலையில், படுக்கையில் தொடையை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டு இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது