விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் நிறைவடைகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 5ஐ வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் 2 போட்டியாளர்கள் வைல்டு கார்ட் என்ட்ரியாக வந்தனர். மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது.
இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக உள்ளனர். பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கான ஷூட்டிங் நேற்று தொடங்கப்பட்டது.
இந்நிலையில், பைனலில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளராக ராஜூ தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிப் பரிசுடன் ராஜூ நிற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
மேலும், 2வது இடத்தை பிரியங்கா, 3வது இடத்தை பாவனி, 4வது இடத்தை அமீர், 5வது இடத்தை நிரூப் ஆகியோர் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் சீசன்-5 பைனல் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று (ஜன.,16) மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில், மக்களிடம் இருந்து அதிகமான வாக்குகளை பெற்று, ராஜு டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ராஜு. டைட்டில் வின்னர் ஆகியுள்ள ராஜுவிற்கு ரூ. 50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர, பிக் பாஸ் நிகழ்ச்சியில் 16 வாரங்கள் இருந்த ராஜுவிற்கு வாரத்திற்கு ரூ. 1 லட்சத்தி 50 ஆயிரம் சம்பளம் என்ற கணக்கில், 16 வாரங்களுக்கு ரூ. 21 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பரிசு தொகை ரூ. 50 லட்சமும், சம்பளம் ரூ. 21 லட்சத்தையும் சேர்த்து ரூ. 71 லட்சத்தை தட்டி சென்றுள்ளார் ராஜு என கூறப்படுகிறது.