23 September, 2023

மின் கட்டணம் செலுத்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கடும் கண்டனம் கிளம்பியதை அடுத்து கூடுதல் மின்நுகர்வுக்கான டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கும் மின்வாரியம்

தமிழகம் முழுவதும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்கிறது.

இவ்வாறு விநியோகம் செய்யப்படும் மின்சாரத்துக்கான கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது.

கூடுதலாக மின்சாரம் பயன்படுத்துவோருக்கு டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. 2ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த டெபாசிட் தொகை வசூலிக்கப்படும். இந்த தொகைக்கு மின்வாரியம் 4 சதவீத வட்டி வழங்குகிறது.

டெபாசிட் தொகையைவிட மின்நுகர்வு கட்டணம் அதிகரிக்கும் போது கூடுதலாக இந்த டெபாசிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பது குறித்து அஞ்சல் மூலமாகவோ, பதிவு செய்யப்பட்ட மின்நுகர்வோரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலமாகவோ மின்வாரியம் தகவல் அனுப்பும்.

தற்போது மின்கட்டணத்துடன் கூடுதல் டெபாசிட் கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து மீட்டர் ரீடிங் அட்டையில் மின்வாரிய ஊழியர்கள் குறிப்பிடுவது இல்லை. இதனால், நுகர்வோருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்

ஏற்கனவே மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தவிர, கடந்த 2 மாதங்களில் கோடை வெயில் காரணமாக வீடுகளில் ஏசி, மின் விசிறி ஆகியவை அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நுகர்வோருக்கு வழக்கத்தைவிட இந்த மாதம் கூடுதலாக மின்கட்டணம் வந்துள்ளது.

இந்த சூழலில், கூடுதல் டெபாசிட் கட்டணமும் வசூலிப்பதால் நுகர்வோருக்கு கடும் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக,ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம் மின்கட்டணம் வந்துள்ளவர்களுக்கு டெபாசிட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

Share