அமீர் நிகழ்ச்சியின் இடையில் தான் போட்டிக்குள் வந்தார் எனவே அவர் தனது பயணம் குறித்து தனியாக தான் பேசியிருந்தார். பின்பு அமீர்-பாவ்னி காதல் குறித்து நிறைய கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது முதன்முறையாக முத்தம் கொடுத்த விஷயம் குறித்து அமீர் பேசியுள்ளார். அதில் அவர், நான் பாவ்னிக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை, அப்படி கொடுத்திருந்தால் தான் பிரச்சனை ஆகி இருக்கும்.
அவர் தடுக்கவே இல்லை, அவருக்கு தெரிந்துதான் கொடுத்தேன். அப்போது இருந்த காதல் உணர்வில் கொடுத்துவிட்டேன், அதை எதற்கு பெரிதாக்குகிறீர்கள், சர்ச்சையாக்குறீங்கள், நாங்கள் இப்போது வரைக்கும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என கூறியுள்ளார்.
