கவர்ச்சிக் கன்னி என்று கூறினாலே, முதலில் நம் கண் முன் வந்து நிற்பவர் நடிகை சில்க் ஸ்மிதா Silk smitha தான்.
1980 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வண்டிச்சக்கரம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் தமிழில் மட்டுமல்லது ஹிந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் கொடிகட்டிப் பறந்தார்.
இவரது காந்த கண்களுக்கும் கட்டழகுக்கும் ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர். இவர் பல விமர்சனங்களில் சிக்கியிருந்தாலும், இவரைப் போல் ஒரு சிறந்த நடிகையை யாரும் பார்த்திருக்க முடியாது என்பதே பலரின் கருத்தாக இருக்கின்றது.
இவர் பழகுவதற்கு சிறு குழந்தை போன்றவர் என்றும் கூறுவார்கள்.
அதுமாத்திரமின்றி உடை அலங்காரத்திலும் இவரை மிஞ்ச ஆளே இல்லையாம். டிரெஸ்ஸிங் சென்ஸ்ஸில் மிகவும் கவனமாக இருக்கும் இவர், வேலை படப்பிடிப்புக்கு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பாராம்.
அதாவது, அவரது ஆடைகள் களைந்திருக்குமாம். சக நடிகை இவரைப் பார்த்து மேலே ஒரு டவலைப் போட்டுக்கொண்டு அமருமாரு சொல்வாராம். அதற்கு சில்க், “பரவாயில்லக்கா, பார்த்தால் பாத்துட்டு போகட்டும்” என்று பதிலளிப்பாராம். அந்தளவுக்கு குழந்தை மனம் படைத்தவர் சில்க் என்று கூறுகிறார்கள்.