30 March, 2023

செ-க்-ஸ் படம் பாத்தியா? பொலிஸ் என பயம் காட்டி கொள்ளை

சில நாட்களுக்கு முன் திருச்சியை சேர்ந்த ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூறியதாவது: நான் போலீஸ் இருந்து பேசுகிறேன், செல்போனில் ஆபாச படங்கள் பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. என்னிடம் ஆதாரம் உள்ளது. இதற்காக உங்களை கைது செய்வோம்” என்று மிரட்டினார்.

இதனால் திடுக்கிட்ட அந்த நபர், வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கூறியுள்ளார். உடனே அந்த மர்ம நபர் தனது வங்கி கணக்கிற்கு பணம் தருமாறு கூறியுள்ளார். இதன் அடிப்படையில் முதல் தவணையாக ரூ.5000 மற்றும் அடுத்த தவணையாக ரூ.15,600-ஐ குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.20,600 டெபாசிட் செய்துள்ளார்.

ஆனால், அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதால் பாதிக்கப்பட்டவர் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் வழக்கு பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தார்.

பணம் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை ஆய்வு செய்ததில், போலீஸ் வேடமணிந்து மிரட்டல் விடுத்த மர்ம நபர் கோவை வடவள்ளியை சேர்ந்த அசோக், 23, என்பது தெரியவந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

Share