21 March, 2023

கள்ள காதலி வீட்டில் உடலுறவு, கட்டிலில் இறந்த காதலன்.. அடுத்து நடந்தது என்ன?

பெங்களூருவில் ஒரு வாரத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பையில் 67 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த சடலம் ஜே.பி.நகர் புத்தேனஹள்ளியில் வசித்து வந்த பால சுப்ரமணியன் என்பது தெரிய வந்தது.

பால சுப்ரமணியன் ஒய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர், கடந்த நவம்பர் 16-ம் தேதி தனது பேரனை பேட்மிண்டன் வகுப்புக்கு விடுவதற்காக தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பின்னர் மாலை 4.55 மணியளவில், பால சுப்ரமணியன் தனது மருமகளுக்கு போன் செய்து, தனிப்பட்ட வேலை இருப்பதால் தான் வர தாமதமாகும் என்று தெரிவித்துள்ளார். அதுவே பால சுப்பிரமணியனின் கடைசி அழைப்பாக இருந்தது. அதன் பிறகு பால சுப்ரமணியன் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியது.

போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, பால சுப்ரமணியன் வீட்டில் வேலை பார்த்து வந்த 35 வயதான பெண் திடீரென மாயமாகியது போலீஸ் கவனத்தை ஈர்த்தது. அவரை தேடி பிடித்து விசாரிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 65 வயதான பால சுப்பிரமணியனுக்கு வேலைக்கார பெண்ணுடன் தகாத உறவு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி வேலைக்கார பெண் வீட்டுக்கு செல்லும் பால சுப்ரமணியன் அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு வருவது வழக்கம். வேலைக்கார பெண்ணுக்கு கணவன் இருப்பதால் அவர் இல்லாத நேரத்தில் இருவரும் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பத்தன்று வீட்டில் இருந்து புறப்பட்ட பால சுப்ரமணியன், பேரனை கோச்சிங் சென்டரில் விட்டுவிட்டு கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பால சுப்ரமணியனனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு கட்டிலிலேயே இறந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண், விஷயம் வெளியில் தெரிந்தால் மானம் போய்விடும் என பயந்து, தனது கணவன், சகோதரர் உதவியுடன் பால சுப்ரமணியனனின் சடலத்தை பெட் ஷீட்டில் மூடி பிளாஸ்டிக் கவரில் வீசியது தெரிய வந்தது.

இதனை உறுதி செய்த போலீசார் வேலைக்கார பெண் அவரது கணவர் மற்றும் சகோதரர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் விசாரணையில், பால சுப்பிரமணியனுக்கு கடந்த ஆண்டு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

Share