இரு பிள்ளைகளின் தந்தைக்கு புத்தளத்தில் நடந்த சோகம்..!!

யானையால் தாக்கப்பட்டு விவாசாயி ஒருவர் பரிதாபமாக‌ உயிரிழந்த சம்பவம் ஒன்று புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (22/02/2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனமடுவ, ஊரியாவ பகுதியைச்சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவர் தினமும் காலை உணவு அருந்துவதற்காக அவரது வீட்டிற்குச் வருவதாகவும், ஆனால் இன்று காலை உணவுக்கு வீட்டிற்கு வராததால், அவரது மனைவி கையடக்கத் தொலைபேசியில் அழைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.அவரது கைத்தொலைபேசி இயங்கிய போதிலும் அவரிடமிருந்து பதில் எதுவும் கிடைக்காமையினால், […]