ஹீரோவாக மாறிய 16 வயது சிறுவன்..!! குவியும் பாராட்டுக்கள்..!

தங்க நகைகளை திருடி மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவன் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளார்.குறித்த சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த திருடர்கள் மீது 16 வயது சிறுவன் துணிச்சலா சைக்கிளை வீசியதால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும் அவர்களிடம் இரண்டு தங்கச் சங்கிலிகள் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் […]

ஐம்பது ரூபாவால் ஏற்பட்ட கத்திகுத்து..!! சந்தேக நபர் கைது..!

ஐம்பது ரூபா பணத்திற்காக இரு நபர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கத்திகுத்தில் முடிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது களுத்துறை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு கத்தியால் குத்தி காயத்தை ஏற்படுத்திய நபர் களுத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு காயமடைந்தவர் களுத்துறை – பலாதொட்டை பிரதேசத்தை சேர்ந்த கந்தபிள்ளை யோகநாதன் என்பவராவார். சந்தேக நபர் நேற்று (20) களுத்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.க‌ளுத்துறை தெற்கு பொலிஸார் மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

20 வயதுடைய மகனால் தாய்க்கு நேர்ந்த கொடுமை..!!

6/3/2024 ளுத்துறை வடக்கு பொலிஸாரால் 59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.20 வயதுடைய களுத்துறையை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைதாகியுள்ளார்.பொலிஸார் கடந்த 4 ஆம் திகதி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.விசாரணையின் போது, ​​சந்தேக நபர் பொலிஸாரிடம் தான் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்றும், சம்பவத்தின் […]

பழைய தகராறு காரணமாக நடந்த கொடூரம்..!! ஒருவர் கொலை..!

கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் களுத்துறை மாவட்டத்தின் வெலிப்பன்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவல பகுதியில் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று (28.02.2024) இரவு இடம் பெற்றுள்ளது. 32 வயதாகிய ஹொரவல, வெலிபன்ன பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் பூப்புனித நீராட்டு விழா ஒன்றின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பூப்புனித நீராட்டு விழா இல்லத்திற்கு வந்த இரு தரப்பினரிடையே பழைய தகராறு காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.அது முற்றிய நிலையில் இளைஞன் ஒருவர் கூரிய […]

சிறைச்சாலைக்கு கணவனை 7மாத குழந்தையுடன் பாக்கச்சென்ற பெண் கைது..!!

ஹெரோயின் போதைப்பொருளை தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்து தனது கணவருக்கு கொடுப்பதற்காக வாதுவ பிரதேசத்தில் உள்ள சிறைச்சாலைக்கு சென்ற பெண் கைதாகியுள்ளார்.குறித்த பெண்னின் 7மாத குழந்தையும் கைதாகியுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாதுவ வெரகம அல்விஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது கணவனுக்கு வழங்குவதற்காக தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் […]

போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள்..!!

களுத்துறை பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் கல்வி கற்கும் ஆறு பாடசாலைகள் அடையாளம் கணப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் பிரிவு தெரிவிக்கின்றன.குறித்த பாடசாலைகளை களுத்துறை களுத்துறை புலனாய்வுப் பிரிவு அடையாளம் கண்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் தெரிவித்தார்.களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் பிரபலமான‌ பாடசாலைகளும் அடங்கும். போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் நற்பெயருக்குக் தீங்கு ஏற்படுத்துவதாக […]

சிறையில் உள்ள கணவனுக்கு ஹெரோயின் போதைப்பொருள் கொண்டு சென்ற மனைவி கைது..!

கணவனைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்ற பெண் ஒருவர் காற்சட்டையில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை சிறை அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிற்கு குறித்த பெண் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்து சென்றுள்ளார். வாதுவை மொல்லிகொட பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக காற்சட்டை ஒன்றை கொண்டு வந்ததாகவும், அதனை சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் […]

கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞன்..! சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள் கைது..

சித்திரவதை கூடமாக இயங்கி வந்த வீடு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.களுத்துறையில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சண்டையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​வீடு புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.இதன்போது வீட்டில் கை கால்கள் […]

பெண் ஒருவருக்காக இரு குழுவிற்கிடையில் வாள்வெட்டு..!

பெண் ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக மில்லனியா பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை – மில்லனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மில்லனியா, பெல்லந்துடாவ பகுதியில் உள்ள விற்பனை நிலையத்திற்கு வெளியே வாள்கள் மற்றும் மன்னா உள்ளிட்ட ஆயுதங்களுடன் இவர்கள் மோதலில் ஈடுபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதோடு மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். […]

உயிருக்கு போரடியவரை 30 நிமிடத்தில் மீட்டேடுத்த இளைஞர்கள்..!

லொறியில் மோதியதன் பின்னர் வேனில் சிக்கிய நபரை களுத்துறை, வஸ்கடுவ இளைஞர்கள் குழுவொன்று காப்பாற்றியுள்ளனர்.30 நிமிட நடவடிக்கையில் இரும்புச் சங்கிலிகள் மற்றும் பிற பொருட்களை பெருமளவில் பயன்படுத்திய பின்னர், அவர்கள் இளைஞரின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறிய லொறி, வஸ்கடுவ பகுதியில் வைத்து அதிவேகமாக பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரும் சத்தத்துடன் இந்த விபத்து நடந்துள்ளது.இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் குழு ஒன்று உடனடியாக அங்கு […]