tamil cinema : இணையத்தில் வைரலாகும் வீடியோ வாழ்க்கை ஒரு நொடி என்பதை புலப்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாட்டில் விற்கிறார்.
பேருந்து புறப்பட்டுவிட்டது. அவர் அதிகமான தண்ணீர் பாட்டில்களை கையில் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஓடியே வருகிறார்.
பஸ்ஸில் இருக்கும் ஒருவருக்கு தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காசு வாங்கிச் செல்கிறார்.
வெறும் பதினான்கு நொடிதான். ஆனால் ஒருவர் வாழ…தன் குடும்பத்தை வாழவைக்க என்னவெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கிறது எனவும், வாழ்க்கை அவ்வளவு ஈஸியில்லை எனபதையும் முகத்தில் அறைந்தது போல் சொல்கிறது இந்தக் காட்சி.