tamil cinema : இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்து துருக்கி நோக்கி சென்ற ஜெட் 2 என்ற விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்களுடன் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது
விமானத்தில் பயணம் மேற்கொண்ட சில குழந்தைகளின் அழுகை சத்தம் தனக்கு தொல்லை தருவதாக அந்தப்பெண் முதலில் பணிப்பெண்களிடம் புகாரளித்துள்ளார். ஆனால் பணிப்பெண்கள் அளித்த பதில்களால் அவர் திருப்தியடையவில்லை.
இதனால் திடீரென அங்கிருந்த பணிப்பெண்களை நோக்கி சத்தத்துடன் கத்தி சண்டையிடத் தொடங்கினார். அவரை அமைதிப்படுத்த அங்கிருந்த பணிப்பெண்கள் முயன்றனர். ஆனால் அவரின் ஆக்ரோஷம் குறையாத நிலையில் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அவர் சக பயணிகளின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் விமானக் குழுவினர் அந்த விமானத்தை வியன்னாவுக்குத் திருப்பினர். அங்கு விமானம் தரை இறங்கியதும் ஆயுதம் ஏந்திய போலீசார் அந்த பெண்ணை விமானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். பின்னர் அந்த விமானம் வியன்னாவில் இருந்து துருக்கியை நோக்கி புறப்பட்டுச் சென்றது.இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.