tamil cinema : உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவில் வழக்கத்திற்கு மாறாக பசுமாட்டின் சத்தம் கேட்கவே, பக்கத்து வீட்டில் இருந்த நபர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது பசுமாட்டுடன் ஒருவர் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது உடலுறவு கொண்ட அந்த நபர் மாடு இருக்கும் வீட்டிற்கு பக்கத்து வீட்டுக்காரர் தான் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாட்டின் உரிமையாளரிடம் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஆதாரத்துடன் எடுத்து கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து மாட்டின் உரிமையாளர் ஜிதேந்திர யாதவ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேசமயம் இந்த சம்பவத்தால் கடும் ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் சம்பந்தப்பட்ட நபரை தேடி பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.