tamil cinema : தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இறப்பதற்கு முன்பு தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்ற ஆசை தாய்மாமன் பாண்டித்துரைக்கு இருந்துள்ளது.
தனது குழந்தைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவரைப் போன்றே மெழுகு சிலையினை உருவாக்கி, மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் தனது தம்பியின் நீண்ட நாள் விருபத்தினை நிறைவேறியதாக கூறும் அவரது அக்கா, இதற்காக ஐந்து லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil cinema

tamil cinema

tamil cinema