tamil cinema : தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் தொடர்பில் கேகாலை தெவலேகம பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 76 வயதுடைய கே.ரெகோனா கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தாயின் உடலை துண்டினால் மூடிவிட்டு வீட்டுக்கு அருகில் குப்பி விளக்கை ஏற்றிவிட்டு கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டை விட்டு மகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கின்றனர், திருமணமாகாத மகள் கூலி வேலை செய்து தாயாருக்கு உணவளித்து வந்துள்ளார்.
ஜா-எல பகுதியில் மகள் பணம் தேடிய போது, தாய் இறந்துவிட்டதாக கேள்வியுற்ற கிராம உத்தியோகத்தர் சகோதரன் ஒருவருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.