tamil cinema : ஒரு நடிகை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே ஒருவர் நடிகை மீரா மிதுன். தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொள்ளும் இவருக்கு மனதில் நீ ஒரு உலக அழகி என்ற நினைப்பை யாரோ விதைத்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் பட்டியலினத்தவர்களை பற்றி தவறாக பேசி பிரச்சனையிலும் மாட்டிக் கொண்டார். அதோடு சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகளை பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்புவது போன்ற தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்தார்.
மீராமிதுன் நான் எங்கு சென்றாலும் எல்லோரும் என்னை சைட் அடிக்கிறார்கள் அழகா பொறந்தது என் தப்பா என்றெல்லாம் உளறி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதனால் கொந்தளித்த பலரும் அவரை கண்டபடி விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதைப்பார்த்த மீராமிதுன் என் அழகைப்பார்த்து எல்லாருக்கும் பொறாமை என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார்.
இதனால் நடிகைகள் பலரும் நீ எல்லாம் ஒரு நடிகையா உன்னால் எங்களுக்குத் தான் அசிங்கம் என்று இவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் வழக்கம் போல தன்னைத் தானே பெருமை பேசிக்கொண்டு சைக்கோவாக மாறி இருக்கிறார்.