tamil cinema:“அட்டகத்தி” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் ரஞ்சித் அவர்கள். முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, “மெட்ராஸ்” திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கபாலி”, “காலா” என அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கினார்.

tamil cinema
பா ரஞ்சித் கடைசியாக, சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கினார். இதில். ஆர்யா, நடிகர் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இதில் நடித்த அணைத்து கதாபாத்திரமும் மக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றன என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் OTT தளத்தில் வெளியானது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

tamil cinema
மேலும், இயக்குனர் பா ரஞ்சித் அனிதா என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகிழினி என்ற மகளும் மிளிரன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் இருக்கும் சமீப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார். இதோ அந்த புகைப்படம்..

tamil cinema