30 May, 2023

“அவன் எப்படி வாழப்போறானோ தெரியல” – 29 ஆண்டுகளாக மகனை தோளில் சுமக்கும் அற்புதத் தாய்!

tamil cinema :  ராஜசேகர், இவர் முதுகெலும்பில் ஏற்படு ம் ஒரு மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இந்த நோய் பாதித்தவர்களுக்கு உடலுக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு வகை புரத சத்து கிடைப்ப தில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குழந்தை வளர வளர அதனுடைய செயல்பாடுகள் மெல்ல மெல்ல குறைந்துவிடுமாம். அதேபோலத் தான் ராஜசேகராலும் தனது 12 வயது வரை கொஞ்சம் சாய்ந்து நடந்து செல்ல முடிந்த நிலையில் தற்போது நடக்கும் சக்தியை முற்றிலும் இழந்துள்ளார் ராஜசேகர்.

B.Sc Computer Science படித்துள்ள ராஜசேகரை அவரது தாய் தான் சுமார் 29 ஆண்டுகளாக பள்ளிக்கும் கல்லுரிக்கும் தூக்கி சென்று வருகின்றார். “பள்ளியிலும் சரி, கல்லுரியில் சரி காலையில் அம்மா எங்கு உக்காரவைத்தார்களோ மாலை வரை அங்கு தான் அமர்ந்திருப்பேன்” என்கிறார் ராஜசேகர். ஆனால் ஒரு காலகட்டம் வந்ததும், என் சக மாணவர்களும் எனக்கு உதவ ஆரம்பித்தனர், இருப்பினும் இன்று வரை நான் அனைவருக்கும் ஒரு பாரமாக மட்டுமே உள்ளேன்.

“என் காலம் முடிவதற்குள் என் புள்ளைய கரைசேக்கணும், அவனுடைய அன்றாட செ ய ல்களை அவனே பார்த்துக்க ணும் அவ்வளவு தான் என் ஆசை. இன்றளவும் என் மகன் டாய்லெட் போகணும்னா கூட என்னைத்தான் நம்பியிருக்கான்” என்று கண்ணீருடன் கூறினார் ராஜசேகரின் தாய்.

tamil cinema

tamil cinema

பெற்றது முதல் இன்று வரை 29 ஆ ண்டுகளாக குழந்தை போல ராஜசேகரை அவரது தாய் தூக்கி சுமக்கிறார்.