tamil cinema : சவூதி அரேபியாவில், ஜெட்டா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவறைகளில் சமோசா மற்றும் பிற தின்பண்டங்களை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த உணவகம் அதிகாரிகளால் மூடப்பட்டதுள்ளது.
காலாவதியான பொருட்களை கண்டறிந்த அதிகாரிகள் அங்கிருந்த உணவுப் பொருட்களில் சில இரண்டு ஆண்டுகளுக்கு முந்தையவை. மேலும் அந்த இடத்தில் பூச்சிகள் மற்றும் எலிகளும் காணப்பட்டன.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த உணவகம் இப்படி மோசமாக செயல்பட்டு வந்துள்ளது. தற்போது அந்த உணவகம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் சுகாதாரமற்ற சூழ்நிலைக்காக உணவகம் மூடப்படுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஜெட்டாவில் உள்ள ஒரு ஷவர்மா உணவகத்தில் ஷவர்மா குவியலின் மீது எலி காணப்பட்டதை அடுத்து மூடப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சவுதி அதிகாரிகள் 2,833 ஆய்வுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதில் 43 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 26 உணவகங்கள் மூடப்பட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது.