tamil cinema : தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மின்வெட்டை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த இரு நாட்களுக்கு மின்சாரத் தேவையில் கணிசமான குறைப்பு எதிர்பார்க்கப்படுவதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைக்கப்பெற்றால் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.