24 September, 2023

ஓரினசேர்க்கை பற்றி உரையாடிய பின் திருமணம் செய்த ஆண்கள்..!

tamil cinema : தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவர் அடிக்கடி அருகிலுள்ள டுமாபால்பேட் பகுதியில் உள்ள ஒரு மதுக்கடைக்கு சென்று குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

அப்போது அதே கடையில் 21வயதான இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி இருவரும் மதுகடையில் அதிகமாக குடித்த நிலையில் போதையில் இருவரும ஒரினச் சேர்க்கை திருமணம் குறித்து பேசியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குடிபோதையிலிருந்த நிலையில் இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோகிநாத் கோவிலுக்கு சென்று ஆட்டோ டிரைவர், 21 வயது இளைஞரின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் இருவரும் தனித்தனியே அவரவர் வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

சில நாட்கள் கழித்து ஜோகிபேட் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு வந்த 21 வயது இளைஞர் ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் தனக்கும், அவர்களது மகனுக்கும் நடந்த திருமணம் குறித்து கூறி இனி தனது கணவருடன் தான் வாழ்வேன் என சொல்லியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர்  இளைஞரை வீட்டை விட்டு துரத்திவிட்டனர். இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இளைஞர் தன்னை தனது பெற்றோர் வீட்டை விட்டு துரத்திவிட்டதால் தனக்கு வாழ வழியில்லை.

எனவே  ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.