30 May, 2023

திருடனை தப்ப விட்ட மனைவி, கணவன் கொடுத்த தண்டணை

யாழில் தோட்டத்தில் வாழை குலையை வெட்டிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தனது மனைவி திருடனைத் தப்பிச் செல்ல விட்டதையடுத்து, கணவன் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் உரும்பரை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாழை குலையை வெட்டிய திருடனை கணவன் கையும் களவுமாக பிடித்துள்ளார்.

திருடனை இளைஞர்கள் சிலரிடம் ஒப்படைத்து பொலிசாரிடம் கொண்டு செல்ல குடும்பஸ்தர் ஆயத்தமாகியுள்ளார் . இந்நிலையில் வாழைக்குலை களவெடுத்த கள்ளனை இளைஞர்கள் தாக்கியதால் முகம் மற்றும் உடலில் சில பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனை அவதானித்த குடும்பஸ்தரின் மனைவி , இரக்கம் பார்த்து திருடனை இளைஞர்களிடமிருந்து விடுவித்து அனுப்பியுள்ளார்.

பிடிபட்ட கள்ளனை பொலிஸ் நிலையம் கொண்டு செல்வதற்கு ஆட்டோவுடன் வந்த குடும்பஸ்தர், கள்ளனை மனைவி விட்டுவிட்டதை அறிந்து கடும் கோபமடைந்து மனைவியை தாக்கியுள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தரின் கடும் கோபத்தை கண்ட இளைஞர்கள் செய்வதறியாது திகைத்து, அவர் கொண்டு வந்த ஆட்டோவிலேயே அவரை ஏற்றிக் கொண்டு வீடு வரை கொண்டு சென்று விட்டதாகவும் தெரியவருகின்றது.