வியாபார‌ நோக்கத்தோடு பழுதடைந்த உணவை விற்ற பிரபல தனியார் உணவகம்..!

இராஜகிரியவில் உள்ள கேஎப்சி கடையொன்றில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்கப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சுகாதார பரிசோதகர்களால் அங்கு இருந்த‌ கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், தாங்கள் உட்கொண்ட கேஎப்சி சிக்கனில் துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து புகார் வந்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து, PHIக்கள் விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தியதாக அந்த அதிகாரி கூறினார்.அதேவேளை , மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார் மேலும் மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் எனவும் கேஎப்சி நிலையத்தில் சோதனை மேற்கொண்ட PHI அதிகாரிகள் தெரிவித்தனர்.