ஏழு நாடுகளுக்கு இலவச விசா..!! அமைச்சரவை தெரிவிப்பு..!

7 நாடுகளுக்கு இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நேற்று (26/04/2024) பாரளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கையில் மனித முக அமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டு குட்டி..!!

தெனியாய, விஹாரஹேன செல்வகந்த பிரதேசத்தில் மனித முக அமைப்பை கொண்ட ஆடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!!

கொழும்பில் பயணித்து கொண்டிருந்த‌ புகையிரதத்தில் ஏற முற்பட்ட இரண்டு பெண்கள் புகையிரதத்தின் இரண்டு பெட்டிகளுக்கு இடையில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்றியதினம் (26.04.2024) கண்டி நோக்கி பயணிப்பதற்காக புகையிரதம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தவேளை நடை பெற்றுள்ளது. அவ்வேளை இரண்டு பெண்கள் புகையிரதத்ததில் ஏற முயன்றபோது இரண்டு பெட்டிகள் நடுவில் இருவரும் சிக்குண்டுள்ளனர்.உடனடியாக புகையிரதம் நிறுத்தப்பட்டு அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றன இந்நிலையில் மீட்கப்பட்ட இருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் […]

பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை..!! பொலிஸாரல் அதிரடி கைது..!

வெல்லவாய பொலிஸாரால் பதின்மவயது சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நபர் தனது சொந்த மகள் மற்றும் அவரது தோழியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் வெல்லவாய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபராவார். சம்பவத்தில் 12 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் இது […]

உடலுறவு கொள்ளாமல் கர்ப்பம்..!! 13 வயது சிறுமியால் அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

13 வயது சிறுமி ஒருவர் உடலுறவு இல்லாமல் கர்ப்பம் தரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சிறுமி குருநாகல் – ஹெட்டிப்பொல பிரதேசத்தைச் சேர்ந்த என தெரிய வந்துள்ளது.குறித்த சிறுமி சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையடுத்து குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், வைத்திய பரிசோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பமாக உள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும் பரிசோதனையில் பாதிக்கப்பட்டவர் உடலுறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் ஹெட்டிப்பொல பொலிஸார் மற்றும் […]

ஏ.டி.எம் இல் பணம் எடுக்க சென்றவர் அங்கேயே உறக்கம்..!! விழிக்கும் போது காத்திருந்த அதிர்ச்சி..!

கொழும்பில் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க‌ சென்ற நபர் ஒருவர் அங்கேயே உறங்கிய நிலையில் அவருடைய கைத்தொலைபேசிகள் மோட்டார் சைக்கிள் என்பன திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த சம்பவமானது கொழும்பு – நுகேகொட விஜேராம சந்தியில் அமைந்துள்ள ஏ.டி.எம் பணம் பெறும் இடத்தில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,பாதுக்க மலகல பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய வர்த்தகர் ஒருவர் விருந்தொன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2.30 மணியளவில் நுகேகொட […]

வைத்தியசாலைக்குள் நடந்த மோசடி..!! இளம் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!

வைத்தியர் போல நடித்து தாயுடன் வைத்தியசாலைக்கு சென்ற சிறுவனின் தங்க நகைகளை நபர் ஒருவர் ஏமாற்றி திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது.நேற்று (25) வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் திருடப்பட்ட தங்க நகைகள் சுமார் 3 இலட்சத்து 82 ஆயிரம் ரூபா பெறுமதியுடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அனுக்கனே குபுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு […]

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஒருவர் அதிரடி கைது..!!சோதனையில் சிக்கிய பொருள்..!

பொலிஸாரால் நேற்றய தினம் (25.04.2024) வவுனியா பிராந்திய கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக முன்னெடுத்த திடீர் சோதனையின் போது கஞ்சாவினை கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1000 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், அது விற்பனைக்காக வைத்திருந்தாரா அல்லது பாவனைக்காக வைத்திருந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தேசிய அடையாள அட்டையில் வரப்போகும் புதிய மாற்றம்..!!

தற்போதுள்ள அடையாள அட்டையில் உள்ள பார்கோடு அகற்றப்பட்டு அதற்கு பதிலாக புதிய கீயூ. ஆர் குறியீட்டுடன் அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.நுவரெலியா ஆட்பதிவு திணைக்களத்தின் புதிய மத்திய மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள 340 இடங்கள் உள்ளதாகவும், ஆனால் அரசாங்கத்துக்கு நிதிப்பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.எனினும், நாடு முழுவதும் மக்களுக்காக பல அலுவலகங்கள் திறக்கப்படும் என்றும் […]

பால் தேநீர் பிரியர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..!! வெளியான முக்கிய செய்தி..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு சலுகையிஅ நுகர்வோருக்கு வழங்குவதற்காக ஒரு கோப்பை பால் தேநீர் 80 ரூபாவிற்கு வழங்க கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் காரணமாக இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால்மா இறக்குமதியாளர்கள் பால் மாவின் சில்லறை விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். சமீபகாலமாக பால்மா விலை உயர்வால் ஹோட்டல்களில் […]