மருமகனின் கோடாரி தாக்குதலில் பலியான மாமனார்..!! வவுனியாவில் நடந்த கொடூரம்..!

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் வவுனியா, மதுரா நகர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த இச் சம்பவமானது நேற்று மாலை (2024.05.06) நடை பெற்றுள்ளது.வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், மாலை நேரம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாமனை மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார். குறித்த சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே […]

தடியால் அடித்து கொள்ளப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்..!!

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தடிகளால் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் களுத்துறை – தெம்புவன பேகமுவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர் […]

மனைவியைக் கொல்ல கைக்குண்டுடன் சென்ற கணவர்..!!மனைவி இல்லாததால் கணவர் செய்த கொடூர செயல்..!

விசேட பொலிஸ் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றய தினம் (05.05.2024) ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பணயக்கைதிகளாக வைத்திருந்துள்ளார்.10 […]

ஒரு மாணவியை காதலித்த இரு மாணவர்கள்..!! இறுதியில் கத்தி குத்தில் முடிந்த சம்பவம்..!

கம்பகாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவரை மற்றுமொரு மாணவர் கத்தியால் குத்தியதில், மேற்படி மாணவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,மாக வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ஒரே மாணவியை தாக்குதல் நடத்திய மாணவனும், தாக்குதலுக்குள்ளான மாணவன் காதலித்து வந்துள்ளனர்.இதேவேளை, இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தன்னுடைய காதலியான மாணவி மற்றுமொரு மாணவனை காதலிப்பதை அறிந்த 10ம் தர மாணவன், 9ம் தர மாணவனை […]

தாயை கட்டி வைத்து விட்டு மகளுக்கு 58 வயது நபர் செய்த கேவல செயல்..!! கொழும்பில் நடந்த பயங்கரம்..!

27 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,சந்தேகநபர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்து, பெண்ணின் தாயின் கைகளை கட்டிவிட்டு, பெண்ணை காரில் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பெண்ணை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய பிரதான சந்தேக நபர் செல்லகதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது […]

சடலமாக மீட்கப்பட்ட பெண்..!!மகனின் அறையில் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ள வாசகங்கள்..!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் குறித்த பெண்ணை அவருடைய மகனே கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.நேற்று முன் தினம் (2024.05.04) தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.37 வயதுடைய அதே பிரதேசத்தைச் சேர்ந்த கனடி ஜஸ்மின் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்யப்பட்டாரா? எனக் கண்டறியும் நோக்குடன் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த மரணம் […]

போதைபொருளுக்காக தந்தை மகனுக்கு செய்த கொடூரம்..!! கொழும்பில் பயங்கரம்..!

கொழும்பில் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஏழு வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தனது கணவர் தமது 7 வயது மகனை தரையில் அடித்ததாக‌ அண்மையில் பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சம்பவ தின‌த்தன்று, தனது கணவர் தன்னிடம் பணம் கேட்டு கொடூரமாக தன்னை […]

மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுகோள்..!! நாட்டில் பரவும் புதிய வைரஸ்..!

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் ஒருவகையான‌ வைரஸ் என்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன், மக்கள் குழுவாக இருக்கும் இடங்களில் முககவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார். இந்த வைரஸ் சுவாச குழாயால் ஏற்படுவதால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என கூறியுள்ளார்.இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு […]

எரிவாயு விலைமாற்றத்தால் சில உணவுவகைகளின் விலையில் மாற்றம்..!!

இலங்கை உணவகங்களில் அதிகளவில் நுகர்ப்படும் கொத்து ரொட்டி மற்றும் ப்ரைடு ரைஸ் ஆகியவற்றின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி கொத்து ரொட்டி மற்றும் ப்ரைட் ரைஸ் விலை 20 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை குறைப்புக்கு அமைவாகவே இந்த விலை குறைப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரோல்ஸ் உள்ளிட்ட சோர்ட் ஈட்ஸ் வகைகளின் விலைகள் 10 ருபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.லிற்ரோ மற்றும் […]

தகராறில் தந்தையின் ஆண் உறுப்பை வெட்டிய மகன்..!!

ரம்புக்கனை பொலிஸாரால் கேகாலை பிரதேசத்தில் தனது தந்தையின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டில் இளைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவத்தில் 58 வயதுடைய ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதலுக்குள்ளனவர் தனது மனைவியுடன் நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்தது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் கடந்த 30 ஆம் திகதி இரவு மது போதையில் வீட்டிற்குச் சென்று மனைவியைப் கொடூரமாக தாக்கியுள்ளார்.இதன்போது இவர் அணிந்திருந்த வேட்டி அவிழ்ந்து கீழே வீழ்ந்துள்ள நிலையில் சம்பவ […]