மருமகனின் கோடாரி தாக்குதலில் பலியான மாமனார்..!! வவுனியாவில் நடந்த கொடூரம்..!

மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த சம்பவம் வவுனியா, மதுரா நகர் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.குறித்த இச் சம்பவமானது நேற்று மாலை (2024.05.06) நடை பெற்றுள்ளது.வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், மாலை நேரம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாமனை மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே மரணமடைந்தவராவார்.இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே மரணமடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.