மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுகோள்..!! நாட்டில் பரவும் புதிய வைரஸ்..!

நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் ஒருவகையான‌ வைரஸ் என்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன், மக்கள் குழுவாக இருக்கும் இடங்களில் முககவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இந்த வைரஸ் சுவாச குழாயால் ஏற்படுவதால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என கூறியுள்ளார்.இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.

இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து முடிந்தவரை விலகி, குழு கூட்டங்களில் முகமூடி அணிந்தால், நோய் வராமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறியுள்ளார்.அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.