தாயை கட்டி வைத்து விட்டு மகளுக்கு 58 வயது நபர் செய்த கேவல செயல்..!! கொழும்பில் நடந்த பயங்கரம்..!

27 வயதுடைய பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவமானது கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் இடம் பெற்றுள்ளது.இச் சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,சந்தேகநபர்கள் மூவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்து, பெண்ணின் தாயின் கைகளை கட்டிவிட்டு, பெண்ணை காரில் கடத்திச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய 58 வயதுடைய பிரதான சந்தேக நபர் செல்லகதிர்காமம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் ரயில் சாரதி என தெரியவந்துள்ளது.அவருடன் வந்த ஏனைய மூன்று சந்தேக நபர்களும் காலி குருந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணையில் கடத்தப்பட்ட பெண் ஒரு குழந்தையின் தாய் எனவும் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.