வாய்த்தகராறால் ஏற்பட்ட விபரீதம்..மனைவியால் கொலை செய்யப்பட்ட கணவன்..!

குருநாகல் பிரதேசத்தில் கணவனை வாளால் வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இக்கொலையானது நேற்றய தினம் பிற்பகல் ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலகஹகம, தல்விட்ட பகுதியைச் சேர்ந்த சுரங்க பிரதீப் குமார என்ற 38 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.மேலதிக விசாரணையின் போது கொலைசெய்த பெண் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர் என தெரியவந்துள்ளது.

நேற்றய தினம் மாலை கணவனுக்கும் மனைவிக்கும் வீட்டில் வைத்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது,இவ்வாறு வாய்த்தகராறு பெரிதகி மனைவி கணவனை வாளால் தாக்கியுள்ளார்.மேலதிக சிகிச்சையின் போது கழுத்து மற்றும் இடது காலில் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.