வவுனியா வர்த்தக நிலையத்தில் கிடந்த சடலம்..!! மேலதிக விசாரணையில் பொலிஸார்..!

இன்றய தினம் (22.03.2024) காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலமானது வவுனியா, தோணிக்கல் ஆலடி வீதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய ரங்கசாமி நேசரத்தினம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.தனது குடும்பத்தை பிரிந்து தாயாருடன் வசித்து வந்த இவர் இவ்வியாபார நிலையத்திலேயே தங்கி இருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸார் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.