கனடாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்திய மரணம்..!! வீட்டில் இருந்து 4 சடலங்கள் மீட்பு..!

கனடா நாட்டு காவல் துறையினர் வீடு ஒன்றில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை(24) கனடாவின், சஸ்கற்றுவானில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சென்று பார்த்தபோது 4 பேர் இறந்து கிடந்துள்ளனர்.இவர்களில் இருவர் பெற்றோர் எனவும் மற்றைய இருவர் பிள்ளைகள் எனவும் தெரியவருகிறது.

உடல்கள் ரெஜினாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், அங்கு பிரேத பரிசோதனைகள் இந்த வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ளன.இந்த சடலங்கள் மீட்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என நம்புவதாகவும்,அவ்வாறு தெரியவந்தால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.