யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுக்காக இளைஞன் செய்த மோசமான செயல்..!!

நேற்றய தினம் திங்கட்கிழமை (15/04/2024) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநகர் பகுதியில் இருவேறு இடங்களில் 90,000 ரூபாய் மற்றும் ஐந்தரை பவுன் நகைகளை திருடிய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 23 வயதுடைய சந்தேகநபர் யாழ்.பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.போதைப்பொருள் பாவனைக்காகவே தான் திருடியதாகச் சந்தேக நபர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்ட பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.