அடுத்த மாதம் முதல் பாடசாலை கட்டமைப்பில் மாற்றம்..!! கல்வி அமைச்சர் தெரிவிப்பு..!

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த மாதம் முதல் கல்வி நிர்வாகத்தின் ஊடாக கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தெரிவித்துள்ளார்.இதற்கமைய எனிவரும் காலங்களில் 1 தொடக்கம் 5 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும்.

6 தொடக்கம் 10 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும் மற்றும் 10 தொடக்கம் 13 வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மேல்நிலைப் பாடசாலைகளாகும் வகைப்படுத்தப்படும்.2018-2020 ஆம் கல்வியாண்டில் தேசிய கல்வி விஞ்ஞான டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்தவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.