கணவர் கண்ணெதிரே மனைவியை கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்..!!

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் பயணி ஒருவரை அவரது கணவரை தாக்கிவிட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று ஒட்டு மொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்குள் ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த சனிக்கிழமை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் நால்வரை தேடி வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.இதற்கிடையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படுகாயமடைந்த பெண் வெளியிட்டுள்ள காணொளி, நாட்டிற்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்ந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் கணவர் கண்ணெதிரே கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.நாட்டுக்கே களங்கத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுமா? என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரேசிலில் பிறந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குறித்த பெண்ணும் இவரது கணவரும் பைக்கில் உலகை சுற்றும் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.66 நாடுகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் கடந்த மார்ச் 1ஆம் திகதி இரவு, அவர்கள் தும்கா மாவட்டத்தில் உள்ள குர்மஹாட் என்ற சிறிய கிராமத்தில் சாலையில் இருந்து சிறிது தொலைவில் ஒரு கூடாரம் அமைத்து உறங்கியுள்ளார்.அப்போது அங்கு வந்த சில வாலிபர்கள் கூடாரத்துக்குள் நுழைந்து இருவரையும் தாக்கி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவர்கள் இருவரும் தட்டுத் தடுமாறி அரை மயக்கத்துடன் சாலைக்கு வந்துள்ளனர்.

பிறகு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரிடம் நடந்ததைக் கூற, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சம்பவம் தொடர்பில் தகவலறிந்து வந்த பொலிஸ் உயர் அதிகாரிகள் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று இரவோடு இரவாக குற்றவாளிகளில் ஒருவரைப் பிடித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் மற்ற குற்றவாளிகள் யார் என்பதும் தெரியவந்தது. இதுவரை நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.