உணவுப்பொருட்களின் விலை மீண்டு உயர்வு..!

நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பல அதிகரித்துள்ளன.இதன்படி, உருளைக்கிழங்கு, பருப்பு, சீனி, வெங்காயம், கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வெட் வரி உயர்வுக்கு முன்னர் 300 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பருப்பின் விலை தற்போது 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.மேலும் சில பகுதிகளில் 290 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சீனியின் விலை 320 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில வர்த்தகர்கள் வெட் வரி அதிகரிப்பு என்பதனைப் பயன்படுத்தி கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.