O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!! விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..!

எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இடை நிறுத்தப்படும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, அன்றைய தினம் 12 நள்ளிரவு முதல் இது அமலுக்கு வரும் என அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.இதேவேளை, அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.