வாடிக்கையாளர்களுக்கு மக்கள் வங்கி வழங்கியுள்ள முக்கிய அறிவித்தல்..!!

போலி எஸ்.எம்.எஸ்(SMS)மோசடி குறித்து மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய‌ எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.பண்டிகை காலங்களில் நீங்கள் பெற்ற அல்லது பெறப்போகும் பொருள் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க, உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு கேட்டு இந்த மோசடியான குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது.

எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.