பண்டிகை காலத்தை முன்னிட்டு நடைபெறும் இணைய மோசடி..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பண்டிகை காலங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சமூக ஊடகப் பதிவுகள் ஊடாக தனிப்பட்ட தகவல்களை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலவசப் பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உரிய தரவுகள் பெறப்படுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டார்.இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 200க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல தெரிவித்தார்.