மனைவியின் தங்கையிடம் கணவர் காட்டிய கைவரிசை..!! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை..!

தனது மனைவியின் சொந்த தங்கையான 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இடம் பெற்றுள்ளது.குறித்த மனைவியின் தங்கையான சிறுமி பாடசாலையில் இருந்து திரும்பியதும் சந்தேக நபர் அவளை வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன், 15 வயது சிறுமியும், சந்தேக நபரும் வீட்டில் இருந்து காணாமல் போனதையடுத்து, மனைவி புதுக்குடியிருப்புப் பொலிஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.அதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் கணவன்-மனைவியாக வீட்டில் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சிறுமியை பரிசோதித்த முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.