பொலிஸார் என கூறி பணப்பறிப்பு..!புத்தளத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம்..

புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் நபரொருவரை கடத்திச் சென்று தாக்கி பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியை அபகரித்த கும்பலொன்றின் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கும்பல் தாங்கள் பொலிஸார் என கூறி அந்த நபரை வலுக்கட்டாயமாக கடத்திசென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் எலுவன்குளம், ரால்மடுவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வேனும் இதுவரை கைப்பற்றப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.இந்த சம்பவம் தொடர்பில் வன்னாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்