வைத்தியசாலையை நடத்திச் சென்ற போலி மருத்துவர்..!!விசாரணையில் தெரிய வந்த உண்மை..!

போலி வைத்தியர் ஒருவர் பியகம பிரதேசத்தில் சட்டத்திற்கு எதிராக வைத்தியசாலை ஒன்றை நடத்திச்சென்ற குற்றத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.66 வயதுடைய பியகம பிரதேசத்தை சேர்ந்த நபரே இச் சம்பவத்தில் கைதாகியுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை நடத்தி வந்த வைத்தியர் ஒருவர் கடந்த வருடம் வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், சந்தேக நபர் வைத்தியர் என்ற போர்வையில் வைத்தியசாலையை தொடர்ந்தும் நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.