போதை ஊசி செலுத்தி பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கும்பல்..!! யாழில் கொடூர சம்பவம்..!

கும்பல் ஒன்று ஒரு பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பருத்தித்துறை பொலிஸாருக்கு புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய‌ கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணின் தாயும் தந்தையும் உயிரிழந்ததையடுத்து, மேற்படி பெண்ணும் அவரது மூத்த சகோதரியும் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் அந்த பெண்ணின் மூத்த சகோதரி இறந்ததை அடுத்து ​​அவரது சகோதரன் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்த வேளை ஐனவரி மாதம் வீட்டில் ஆட்களற்ற வேளை உள்நுழைந்த கும்பல் ஒன்று போதைப் பொருளை வழங்கி, அதனை பலவந்தமாக நுகர வைத்து, அடித்து துன்புறுத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் பருத்தித்துறை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் குறித்த பெண் தங்கி நின்ற வேளை அங்கும் குறித்த கும்பல் சென்று, பெண்ணுக்கு போதை ஊசி செலுத்தி, தாக்கி வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

காயமடைந்த பெண் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் முதல் பல்வேறு தடவைகள் 10 பேரை உள்ளடக்கிய கும்பல் போதைப் பொருளை கட்டாயப்படுத்தி நுகர வைத்து, உயிர் அச்சுறுத்தல் விடுத்து தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தனர் என தெரிவித்துள்ளார்.பெண்ணின் வாக்குமூலத்தை புகாராக பதிவு செய்ததையடுத்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.