வவுனியாவில் நடந்த பயங்கரம்..!! குழந்தை மீது கத்தியை வைத்து மிரட்டிய கும்பல்..!

வவுனியா நகரில் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயை வழிமறித்து மூன்று பேர் கொண்ட கும்பல் குழந்தை மேல் கத்தியை வைத்து மிரட்டி நகைகளையும் மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று (2024.04.17) காலை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த பெண் கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில், இன்று அதிகாலை முகமூடி அணிந்த மூவர் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வீதியில் மறைத்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன்,

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்