சகோதரனை அடித்து கொன்று உடலை ஓடையில் போட்டு எரித்தவர் கைது…!

58 வயதாகிய தன்னுடைய சகோதரனை அடித்துக் கொலை செய்து அவரது உடலை ஓடையில் போட்டு எரித்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.அக்குரஸ்ஸ, ஹேனேகம, பலபத்த, உடுகமவத்த ஹேன பிரதேசத்தில் வசித்த‌ மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் விசாரனையில் இருவரது வீடுகளும் ஒரே காணியில் உயரமான மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இறந்தவரின் நிரந்தர வசிப்பிடம் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் உள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி வீட்டுக்கு வருவதாகக் கூறி சென்ற போதும் அவர் வரவில்லை என அவரது மனைவி பொலிஸில் செய்த முறைப்பாட்டின்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட விசாரணையில் உயிரிந்தவரின் சகோதரர் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து பொலிஸார் சந்தேக நபரிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது இந்த தகவல்கள் வெளியாகின.