மகனை ஊக்குவித்த தந்தைக்கு நடந்த சோகம்..!!புத்தாண்டு நிகழ்வின் போது நடந்த‌ துயரம்..!

புத்தாண்டு தினத்தன்று இரத்தினபுரி – பெல்மடுல்ல, படலந்த பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் எதிர்பார்க்காத நிலையில் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த நிகழ்வின் ஒரு அங்கமாக இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற தனது மகனுக்கு ஊக்கமளித்த தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த‌ தந்தை தனது 16 வயது மகனைப் பாதுகாக்கவும் ஊக்கப்படுத்தவும் அவருடன் சேர்ந்து ஓடியுள்ளார்.இதன்போது, தந்தை திடீரென மயங்கி விழுந்து, பெல்மடுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.