ஊஞ்சலினால் வந்த விபரீதம்..!!8 வயது சிறுவன் பலி..!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகிச் சுற்றியதால் சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் பதிவாகியுள்ளது.8 வயதுடை பாலத்தோப்பூர் பகுதியைச் சேர்ந்த மர்சூன் அஷ்பாக் எனும் சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவமானது நேற்று மாலை இடம் பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் தனியாக ஆடிக்கொண்டிருந்த போது ஊஞ்சலின் கயிறு சிறுவனின் கழுத்தில் இறுகிய நிலையில், அப்போது அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸாவை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். விசாரணைகளின் பின் ஜனாஸா பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.